நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது – சரத் பொன்சேகா

Sarath Fonseka
Sarath Fonseka

நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டு சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.

சுகாதார ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கினால் கொவிட் தாக்கத்தை சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.