புலம்பெயர் தமிழர்கள் நாட்டின் அதிகாரங்களை கைப்பற்றி கொள்வதற்கான வாய்ப்புள்ளது-எதிர்க்கட்சி

download 16
download 16

புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாட்டின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாடு பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.

சிங்கள பௌத்தம் தொடர்பில் அக்கறையுடன் பேசி வந்தவர்கள். இன்று புலம்பெயர் தமிழர் அமைப்பினருக்கும் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைமை ஏற்பட்டால் , புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாட்டின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.