விஷவாயுவை சுவாசித்தமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் …

Maranam 1
Maranam 1

மாவனெல்லை – ஹிங்குல பகுதியில் மலக்குழிக்குள் வீழ்ந்த சிறுமி விஷவாயுவை சுவாசித்தே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27) மாலை முற்றத்தை பெருக்கிக்கொண்டிருந்த சிறுமி மலக்குழி மூடப்பட்டிருந்த கொங்ரீட்டின் உடைந்த பகுதியின் ஊடாக குழிக்குள் வீழ்ந்துள்ளார்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.

ஹிங்கல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தப்பது.