நாட்டில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் நேற்று 409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில், 401 பேர் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் 8 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.