சஜித் வெற்றி பெறும் வரை ஓய மாட்டோம் – மனோ

3 ff
3 ff

புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச வெற்றி பெறும் வரையில் நாம் ஓய மாட்டோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் இன்று தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், “சஜித் பிரேமதாச வெற்றியின் பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி மலையக தமிழ் விவசாயிகள் என்ற அடையாளத்தை பெற்றுக்கொடுப்பார் என்றும், எங்களது முதலாவது இனிங்ஸ் முடிந்து விட்ட நிலையில்இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸில் சொந்த காணியில், சொந்த வீட்டில் தோட்டத் தொழிலாளர்கள் கௌரவத்துடன் வாழ வைப்பதற்கு சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுப்பார் என்றும், அதற்காக அமைச்சர் பாடுபட்டு வருவதாகவும் அவர்இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.