கிளிநொச்சியில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

1604416293 kilinochchi 2 1
1604416293 kilinochchi 2 1

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி தொண்டமான்நகரில் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த மூவருக்கும் குறித்த விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற மற்றுமொரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஊழியர் ஒருவருக்கும் மேலும் அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் சிப்பாய்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.