பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

images 18
images 18

பசறை – நமுனுகல – கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையிலேயே இந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் 107 பேருக்கு இன்று பீ சீ ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நபர்களுக்கு முன்னெடுக்கபட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் நாளை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.