ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு காலி தலாபிட்டிய மற்றும் இரத்தினபுரி நிவித்திகல கெட்டனிகேவத்த பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு பள்ளிவாசல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிவாசல்களின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.
குறித்த தாக்குதவ் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.