ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியுற்றதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (Nov.19) ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் புதிய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறை படுத்துவதற்காக பிரதமர் அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.