வசதி குறைந்த குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

kotabaya 2
kotabaya 2

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு அரச துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

அதன் போது அவர்களின் திறன் குறித்து கவனம் செலுத்தத்
தேவையில்லை என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (Nov.22) இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் பின் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பொதுமக்கள் எங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அரசியலை விரும்பாத மக்களின் மனங்களை மாற்றும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.