மட்டக்களப்பில் தற்போது பெய்து வரும் கனமழையினால் மக்கள் இடம்பெயர்ந்து, விவசாய நிலங்கள் அழிவடைந்து காணப்படுகின்றது.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2000 ஏக்கருக்கு அதிகமான விவசாயக் காணிகள் நீரில் மூழ்கியதுடன், ஆயித்தியமலை பிரதேசத்தில் பொன்னாங்கண்ணி சேனை கண்டம், வாழைச்சேனைக் கண்டம் என்று சொல்லப்படுகின்ற பாரியளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் தாண்டுள்ளன.
தொடர்சிச்சியாக பாதிக்கப்படும் இப் பிரதேச விவசாயிகளுக்கு முறையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
எனவே தங்களுக்கான நிவாரணத்தினை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.