இலங்கையின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்

gota5
gota5

இலங்கை இறைமை பொருந்திய நாடு எனவும் அதன் அடையாளத்தை இந்தியா, சீனா போன்ற நாடுகள் மதிக்க வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதனை தனது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார். அதில் அவர்,

“ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.

அதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்று” அவர் குறிப்பிட்டுள்ளார்.