நீரை கடந்து நகருக்கு வரும் வாகனேரி மக்கள்

01 2
01 2

தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழையினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி கிராம மக்கள் நகர் பகுதிக்கு வருவதில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வாகனேரி பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு செல்லும் காவத்தமுனை வீதியை ஊடறுத்து நீர் செல்வதால் மக்களின் போக்குவரத்து பெரும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் வெள்ளத்தின் மூலம் தங்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வெள்ள நீரைப் பொறுப்பெடுத்தாமல் நீரை கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செல்கின்றனர்.

வாகனேரி பிரதேசத்தின் வயல் நிலங்கள் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், மக்களின் ஜீவனோபாய தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.