சீரற்ற வானிலை நீடிப்பு- களத்தில் வியாழேந்திரன்!!

IMG 20191206 WA0004
IMG 20191206 WA0004

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழையானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதே நேரம் சீரற்ற காலநிலையினால் பாதிக்கபட்டு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மகக்ள் தொடர்பில் எஸ்.வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்;

நாட்டில் இடம் பெறுகின்ற அடை மழையானது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த அடை மழைகாரணமாக அதிகமாக விவசாயிகளும், மீனவர்களும், அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் பாதிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்காக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் மற்றும் முப்படைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழு, அரசதிணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவணங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதே வேளை இன்றுவரை மாவட்டத்தில் மாத்திரம் பொதுமக்களை பாதுகாப்பதற்காக 8 முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மழை நீரின் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக மாவட்டத்தின் சகல துறை அதிகாரிகளையும் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 6696 குடும்பங்களை சேர்ந்த 22614 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நலன்புரி முகாம்களில் சுமார் 301 குடும்பங்களைச் சேர்ந்த 799 நபர்கர்கள் தங்கவைக்கப்பட்டுள்தாகவும் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும், சுகாதார தேவைகள் கருதி வைத்திய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தேவை கருதி பொலிஸ் உஸ்த்தியோகஸ்தர்கள் களப்பணிகளில் அமர்த்தப் பட்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் தான் உட்பட அனைத்து அரச அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை கா.பொ.த சாதாரண பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் தொற்று நோய்களில் இருந்து பொதுமக்களை அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விசேடமாக வெள்ளத்தினால் பாதிக்கபட்ட அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் நாட்டின் கெளரவ பிரதமர் மகிந்தராஜபக்க அவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குறித்த அடைமழையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.