ஆரையம்பதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளத்தினால் இயல்பாக வழிந்தோடக்கூடிய நீர் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்து காத்தான்குடி நகர சபைத் தலைவர் தலைமையில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர்;
ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து தேவையற்ற விதத்தில் ஊர் மத்தியிலே அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றினால் இயற்கையாக நீரோடும் வழி தடைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 5000 குடும்பங்களைக் கொண்ட காத்தான்குடி, ஆரையம்பதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனவே இதற்கான தீர்வினை உரிய அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.