சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய இயற்கை காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் 5.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதி மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் கீழ் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு அடிப்படை நிவாரண நிதியாக 3.7 மில்லியன் ரூபா வழங்கப்படும் எனவும் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.