5 ஆண்டினுள் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்

prasanna ranatunga 1
prasanna ranatunga 1

புதிய அரசாங்கத்தின் கொள்கை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சில் நேற்று (Dec.06) இடம்பெற்ற காலாண்டு பயிற்சி திட்டங்களிற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலத்தில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே தமது நோக்கமென்றும், 2020 – 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.