சிறுத்தை ஒன்றின் உடல் மீட்பு

DSC00624
DSC00624

உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(வியாழக்கிழமை ) உடல் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுத்தை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதுடன் சடலம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை இனங் காணுவதற்காக காவல்துறையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.