கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

MANNAR HQ
MANNAR HQ

மன்னார் அரச உத்தியோகத்தரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸ்சாந்தன் தெரிவிக்கையில்,

” கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஈடுவைக்கச் சென்ற போது குறித்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொள்ளைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருகின்றது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ‘தாழிக் கொடி’ உட்பட ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமை கீரி பகுதியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் மன்னார் பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரனைகளுக்கு அமைய கொள்ளைச் சம்பவத்துடன் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் வெகு விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்தார்.