அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் பூஞ்சைகளின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கையை மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பருவ மழையைத் தொடர்ந்து, கடுமையான வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ளதாலும் அளவுக்கதிகமான இரசாயனப் பொருட்களின் பாவனை, அதிகளவிலான பயிர் அடர்த்தி, களைகளை முறையாகக் கட்டுப்படுத்தாமை போன்ற காரணங்களினாலும் பூஞ்சைத் தாக்கம் ஏற்பட்டு வருவதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.