மட்டக்களப்பு மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா!

batti1 2
batti1 2

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தைப்பொங்கல் விழா மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இன்று (17) மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் நடைபெற்றது.

இத்தைப்பொங்கல் விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளையும் சேர்ந்த பிரதேசசெயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் ,கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள்,சமூர்த்தி சங்கங்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அறுவடை நிகழ்வு, இறை வழிபாடு, தைப்பவனி, கொடியேற்றம், தேசியகீதம், மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்பு நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடல், தலைமை உரை, தமிழ்த் தாய் வணக்கம், வசந்தன் கூத்து, கிராமிய நடனம், தமிழ் மொழி வாழ்த்து போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப்பொங்கல் விழாவிலே 17 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.