2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயினால் குறைந்தளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளது.
டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.