யாழில் மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர் !

Girl 5
Girl 5

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்கள் மூவரை அதிபர் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்(05) இடம்பெற்றுள்ளது.

அதிபரின் தாக்குதலால் கடுமையான காயங்களுக்கு உள்ளான லக்ஸ்மன், லக்சன் ஆகிய இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9 வயதுடைய இவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத சந்தர்ப்பத்தில் விளையாடிய பொழுது, அதிபர் அவர்களை பச்சை மட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

மாணவர்கள் மூவரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.