மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்!

41
41

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இந்த மாவட்டம் தனிமைப்படுத்தப்படும் நிலையேற்படும். இந்த அனர்த்ததில் இருந்து தமது மாவட்டத்தினை பாதுகாக்க தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வருமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அந்த அழைப்பில் தெரிவித்திருந்தது.

இந்த அழைப்பிற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.