எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணங்கியுள்ளன.
புதன்கிழமை இரவு 11 ஆம் திகதி ரவூப் ஹக்கீமுக்கும், றிசாத் பதியுதீனுக்கும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஹக்கீமின் வீட்டில் நடைபெற்றுள்ளது.
இப்பேச்சிலேயே தராசு சின்னத்தில், இரு கட்சிகளும் களமிறங்க தீர்மானித்துள்ளன.