கொரோனா அச்சம் மேலும் இருவர் மருத்துவனையில்!

36 dd
36 dd

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், 50 மற்றும் 43 வயதுடையவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த நபர்களில் ஒருவர், இத்தாலியிலிருந்து இம்மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்ததாகவும், சோமாவதிக்கு யாத்திரை சென்றிருந்தாகவும் தெரியவந்துள்ளது.

அவர் நாட்டின் சில பகுதிகளுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடுமையான காய்ச்சல் காரணமாக அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றும் வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மேலதிக சிகிச்சைக்காக இன்று காலை குறித்த நபர் அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு (IDH) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 உள்நாட்டவரும் 04 வெளிநாட்டவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.