ஊரடங்குச் சட்டத்தை மீறிய 790 பேர் கைது! – 154 வாகனங்களும் பறிமுதல்

6 g 1
6 g 1

கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட விதிகளை மீறி வீதிகளில் நடமாடிய 790 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 154 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையான நடவடிக்கைகளின்போது கைதுகள் மற்றும் வாகனப் பறிமுதல்கள் இடம்பெற்றன எனவும் பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.