நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 589 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 362 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமுல்படுத்தப்பட்டது. அன்று மாலை 6 மணி முதல் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.