வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்தமாதிரிகள் பரிசோதனை:யாழில்

lab 1585990134
lab 1585990134

யாழ் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்தமாதிரிகள் பரிசோதனை

யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை வவுனியா பொது சுகாதார துறையினரால் குறித்த இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரனா தொற்று பரிசோனைக்காக வவுனியா, காத்தான் கோட்டம் பகுதியில் ஒரு குடும்பமும்,  ஓமந்தை அரச வீட்டுத் திட்ட பகுதியில் ஒரு குடும்பமும், புளியங்குளம் முத்துமாரி நகர் பகுதியில் 6 குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த குடும்பங்களில் இருந்து ஆராதனையில் கலந்து கொண்ட 8 பேரின் இரத்த மாதிரிகள் சுகாதார துறையினரால் பெறப்பட்டு கொரனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.