கைது 17, 717ஆக உயர்வு!

download 17
download 17

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்று (07) காலை 6 மணி முதல் இன்று (08) காலை 6. மணி வரையான 24 மணி நேரத்தில் ஆயிரத்து 815 பேர் கைதுசெய்யப்பட்டுள்னர். இக்காலப்பகுதியில் 595 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் 17 ஆயிரத்து 717 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 586 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.