யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து முடக்கம்!

download 1 9
download 1 9

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி விசேட செயலணி இன்று அறிவித்துள்ளது,

ஏனைய 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம், நாளை (09) காலை 6 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி விசேட செயலணி மேலும் தெரிவித்துள்ளது.