தனிமைப்படுத்தப்பட்டார் முன்னாள் எம்.பி. மஸ்தான்

kk
kk

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என அறியமுடிந்தது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் கடந்த 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தின் மரண வீடொன்றுக்குச் சென்றார் எனவும், அவர் அங்கு வந்திருந்த முன்னாள் எம்.பி. காதற் மஸ்தான் மற்றும் இதர பலருடன் நீண்ட நேரம் உரையாடியிருந்தார் எனவும் கண்டறியப்பட்டது. இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புத்தளத்தில் கண்டறியப்பட்டவர் இந்தோனேசியா சென்று நாடு திரும்பியவராவார். இந்தநிலையில், அவர் மரணவீட்டுக்குச் சென்று வந்த மன்னார் தாராபுரம் கிராமமும் முடக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் சென்றுவருவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.