“நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை அடைந்துகொள்வதற்கு அரசியல், பொருளாதார, விவசாய மற்றும் சமூகவியல் துறைசார் தரப்புக்களுடன் அரசு ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்.”
– இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து கரு ஜயசூரிய அவரது ருவிட்டர் பக்கத்தில்,
“மிகவும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் ‘கலந்துரையாடல்’ என்பது வெற்றிக்கு மிகவும் அவசியமானதாகும். நாம் இப்போது பொருளாதார மற்றும் உணவுப்பொருட்களுக்கான நெருக்கடியைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
எனவே, தற்போதைய பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை அடைந்துகொள்வதற்கு அரசியல், பொருளாதார, விவசாய மற்றும் சமூகவியல் துறைசார் தரப்புக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் அரசு ஈடுபடும் என்று எதிர்பார்க்கின்றேன்” – என்று பதிவிட்டுள்ளார்.