இலங்கையர்களை அழைத்துவர அமைச்சரவை அனுமதி!

vikatan 2019 05 e3de9e78 12e1 4fbe b7ab f875fab06710 51023 thumb
vikatan 2019 05 e3de9e78 12e1 4fbe b7ab f875fab06710 51023 thumb

கொரோனா தொற்று நோய் உலகளாவிய ரீதியில் பரவி பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.

மேலும் இதன் காரணமாக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் விமான போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ரமேஷ் ப்த்திரன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 13 சர்வதேச விமான நிலையங்களில் 33 இலங்கையர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.