பேருந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட கடற்படையினர்!!

accident representational image ani
accident representational image ani

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ் நிலை காரணமாக கடற்படை சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த 5 கடற்படை சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி-கொழும்பு பிரதான வீதியில் பயணித்து்கொண்டிருந்த குறித்த பேருந்து அம்பலாங்கொடை-ரன்தொபே பகுதியில் வைத்து வீதியிலிருந்து விலகி அருகில் இருந்த சுவரொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று (27) இரவு வேளை இடமபெற்றுள்ளது.

மேற்படி விபத்தில், கடற்படை தலைமையகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த கடற்படை சிப்பாய்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.