நாட்டில் மேலும் 11 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி!

Untitled
Untitled

நாட்டியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 835 பேரில் 404 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மேலும், நேற்றையதினம் (8) அடையாளம் காணப்பட்ட 11 கொரோனா தொற்றாளர்களும் வெலிசற கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 835 ஆக உயர்டைந்துள்ளதுடன், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 16 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என அவர் கூறியுள்ளார்.