நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை!

 பொலிஸ் மா அதிபர்
பொலிஸ் மா அதிபர்

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலகட்டங்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் செல்ல வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு குறித்த விடயத்தை பின்பற்றாதவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் நாளை மறுதினம் (11) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தப்படவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அவர் தெரிவித்தார்.

இதனூடாக வாரத்தில் 5 நாட்களுக்கு மக்கள் அடையாள அட்டையின் பிரகாரம் வெளியேற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.