தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குகன் என அழைக்கப்படும் கிறிஸ்ரி குகராஜா மற்றும் கட்சியின் நிதிச் செயலாளர் தாஸ் என அழைக்கப்டும் சிவதாசன் ஆகியோரின் (21) ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன்றாஜ் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.