நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்வடைத்துள்ளது.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் (25) பேரில், (23) பேர் கடற்படை வீரர்கள் எனவும், இருவர் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 520 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 431 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 106 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.