இலங்கையில் சீரற்ற காலநிலை; இதுவரை இருவர் பலி!

.jpg
.jpg

இலங்கையில் பெய்துவரும் கனமழையால் தற்போதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

மேலும் கேகாலை – வத்தாராமஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், கேகாலை – வல்தெனிய பகுதியில் மண் திட்டு இடிந்து வீழ்ந்ததில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.