நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 660 பேர் கைது!

th 9 1
th 9 1

நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 660 பேர் இன்று காலை (06) மணி நிறைவில் (24) மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது (256) வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய மார்ச் மாதம் (20) ஆம் நாள் தொடக்கம் இன்று வரை (60) ஆயிரத்து (425) பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், (16) ஆயிரத்து (924) வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு சட்டத்தினை மீறிய (17) ஆயிரத்து (193) பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.