மட்டக்களப்பு-ஏறாவூர்பற்று,செங்கலடி பிரதேச செயலகத்தில் புதிய முறையில் காலினால் அழுத்தி கைகளை கழுவுவதற்கான இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ் இயந்திரத்தினை உயர் கல்வி மற்றும் புத்தாக்க அமைச்சின் அனுசரணையுடாக, தேசிய அபிவிருத்தி நிலையம் (NERD) தொழிநுட்பம் ஏறாவூர் பற்று பிரதேச செயலக விதாதா வலநிலையத்தினூடாக பிரதேச செயலாளர் நல்லையா.வில்வரெட்ணம் அவர்களின் தலைமையில் இப் பிரதேசத்தை சேர்ந்த விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகஸ்தர் வை.சுரேந்திரன் அவர்களின் வழிகாட்டளில் இப் பிரதேசத்தை சேர்ந்த தொழில் முயற்சியாளர் ஆதவனால் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ் இயந்திரம் தற்போது மக்களின் பாவனைக்கு உபயோகத்திற்காக விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.