அம்பாறையில் மீண்டும் தொடங்கியது சப்ரிகம வேலைத்திட்டம்!

download 2
download 2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட சப்ரிகம வேலைத்திட்டப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மருதமுனை மக்களின் நீண்டகாலக் குறைபாடாக இருந்த ஜாயா வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) ஆரம்பமாகின.

மருதமுனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டால் அதன் தலைவர் பீ.எம்.நஸ்றுதீன் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப்பணிக்கு இருபது லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.

பாடசாலை உட்பட பல பொது நிறுவனங்கள் இவ்வீதிப்புனரமைப்பு மூலம் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.