சிறிகொத்தவில் குழப்ப நிலை!

images 4
images 4

தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (8) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்தியதன் பின்னரே இந்த அமையின்மை ஏற்பட்டுள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.