கோர விபத்து ஒருவர் படுகாயம்- வவுனியாவில் சம்பவம்!

 விப 2
விப 2

வவுனியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட தேக்கவத்தை பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வாகனம் நுவரெலியாவில் இருந்து யாழ் சாவகச்சேரி நோக்கி பயணித்து கொண்டிருந்த போது அதிகாலை (1) மணியளவில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் வைத்து, வீதிகரையில் இருந்த தொலைபேசிகம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்துபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஓட்டிவந்த கார் கடுமையான சேதங்களிற்குள்ளாகியது.

மேலும் விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.