இலங்கையின் முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் (10) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய (8) தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.