கிளிநொச்சி அறிவியல் நகர்- வேதா குடியிருப்பில் யாழ் மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் மக்கள் சந்திப்பு இன்று மாலை 4 மணியலவில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் யாழ் மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான இமானுவேல் ஆனோல்ட் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
அதோடு மிக முக்கிய கருத்துரைகள் வழங்கப்பட்டது ,தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஆனோல்ட் கலந்துகொண்ட முதல் மக்கள் சந்திப்பாக இது கருதப்படுகிறது.
சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் ,மாதர் சங்க பிரதி நிதிகள் ,மக்கள் ,நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டதோடு ,கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைகள் ,மற்றும் சமூக இடைவெளி பேணல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டது .