எல்பிட்டிய பிரதேச சபைக்காக நேற்று நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்றுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதாரனபதிரன முன்னர் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டி பிரதேச சபையில் 17 உறுப்பினர்களை வெற்றிக்கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அந்த சபையை தனது வசமாக்கிக்கொண்டது.
அதில்,
ஐக்கிய தேசியக் கட்சி ஏழு உறுப்பினர்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களையும்
ஜே.வி.பி இரண்டு உறுப்பினர்களையும் தனதாக்கிக் கொண்டது.
இவர்களுள் 75 சதவீதமானோர் வாக்களித்தனர்
அளிக்கப்பட்ட வாக்குகள் 42,100
செல்லுப்படியான வாக்குகள் 41,503
நிராகரிக்கப்பட்டவை 597 வாக்குகள் ஆகும்.