மலையக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டிப்பொல மற்றும் அம்பபேவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.