கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடைநிறுத்தப்பட்டிருந்த 38 சிறு மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் குறித்த விடயம் தொடர்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த 38 சிறிய மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக தேசிய மின் உற்பத்திக்காக 75 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.